வேலூரில் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எம்.எல்.ஏ ராஜா (எ) ராஜ்குமார் (43) அரியூர் பகுதியில் வசித்து வந்தார் நேற்று முன்தினம் ஒரு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி இரவு வீட்டிற்கு செல்லும் வழியில (Honda Activa ) தனது இருசக்கர வாகனத்துடன் அரியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது KA-05-6048 பதிவெண் கொண்ட காரில் வந்த அரியூர் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ், அஜித்குமார், ராஜேஷ், சந்துரு, கார்த்திகேயன் ஆகியோர் ரவுடி எம்எல்ஏ ராஜாவை சரமாரியாக தலையில் கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
குற்றவாளிகள் அனைவரும் அதே காரில் ஏறி தப்பிச் சென்றனர். உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அரியூர் போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எம்எல்ஏ ராஜாவின் இறுதிச்சடங்கு நேற்று முடிவடைந்தது இந்த நிலையில்
மேலும் உடனடியாக கொலை செய்தவர்களை தேடினர் காரில் தப்பிச்சென்ற அனைவரையும் வேலூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீசார் கணியம்பாடி அருகே 5 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்
கைது செய்யப்பட்ட தேஜாஸின் உறவினர் காமேஷ் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு எம்எல்ஏ ராஜா கொலை செய்த முன்விரோதம் காரணமாக வெட்டியதாக தெரியவந்துள்ளது
மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இறந்த ராஜா (எ) MLA ராஜா மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20 மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்பொழுது ரவுடி எம்எல்ஏ ராஜா (எ) ராஜ்குமாரை சரா மாறியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.