Categories: தமிழகம்

பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு… 8 வருடங்களுக்கு பின் நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!!

கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தாமரைக் கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தாமரை கண்ணன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞரை 14 பேர் அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்.டி.சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி உத்திரவிட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்தார்.

விக்கி ,மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ் , பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைப்பெற்ற தாமரைச்செல்வன் என்பவரின் கொலை வழக்கில் நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பளித்தது உத்தரவிட்டார் 147, 148, 452, 307, 302 IPC & 3(2) (V,a) SC/ ST POA சட்டம் 2015 உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தண்டனை பெற்றவர்களின் விபரம் :

1.தல விக்கி- இரட்டை ஆயுள் தண்டனை

2.தோப்பு மகேந்திரன் – இரட்டை ஆயுள் தண்டனை

3.கார்த்திக் @ டிப்ஸ் கார்த்திக் – இரட்டை ஆயுள் தண்டனை

4.கவாஸ்கான்- இரட்டை ஆயுள் தண்டனை

5.ஜெய்சிங்(இறந்தார்)

6.சுரேஷ் @ வால் சுரேஷ் – இரட்டை ஆயுள் தண்டனை

7.பிரகாஷ் – இரட்டை தண்டனை

8.நவீன் @ நந்து நவீன் – இரட்டை ஆயுள் தண்டனை

9.கௌதம் @ கருப்பு கௌதம் – ஆயுள் தண்டனை+ரூ5000 அபராதம்

10.விமல் – இரட்டை ஆயுள் தண்டனை

11.விஜய்- (விடுதலை- 15.07.24)- C4 HS-04/2020-

12.சைமன் கிறிஸ்டோபர் – ஆயுள் தண்டனை+ ரூ5000 அபராதம்

13.கௌதம் @ ஒன்ட்ராய் கௌதம் – இரட்டை ஆயுள் தண்டனை

14.கண்ணாச்சி கலைவாணன் – இரட்டை ஆயுள் தண்டனை

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.