கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில் செல்போன் தவறி விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக குடிபோதையில் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஆனால் மேலே வர முடியாமல் 20 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், ஜெயக்குமாரை உயிருடன் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.பலத்த மழை, மிகுந்த இருள் சூழ்நிலையும் கடும் குளிரையும் என எதையும் பொருட்படுத்தாமல் இக்கட்டான சூழ்நிலையில் தீயணைப்பு வீரர் மகேந்திரன் கிணற்றில் இறங்கி உயிருக்காக போராடி கொண்டிருந்த ஜெயக்குமாரை உயிருடன் மீட்டனர்.
கடுமையான சூழலில் குடிபோதையில் கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.