ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து(22). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு அவர்களது உறவினரை அழைத்து வந்து ரயில் ஏற்றிவிட்டுள்ளார்.
பிறகு மீண்டும் செட்டித்தாங்கல் வழியாக கொண்டக்குப்பம் பகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவரது செல்போன் (narzo 50A android mobile) திடீரென வெடித்தது. இதில், தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முத்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.