சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஒத்தக்கடை திருச்சி துறையூர் சாலையில் விபத்தில் காயமடைந்த பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் திருவெள்ளரை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது துறையூர் சாலையில் ஒத்தக்கடை என்ற இடத்தில் மற்றொரு இரு சக்கர வாகனம் விஜயலட்சுமி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆசிரியை விஜயலட்சுமி சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது அவ்வழியாக உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி காயம் அடைந்த பள்ளி ஆசிரியை உடனடியாக தனது காரில் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது ஆய்வு பணிக்கு புறப்பட்டு சென்றார். தலைமை ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.