பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனர் குறித்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும்தானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பழனியில் இருந்து தேனிக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. பழனி நகரில் இருந்து புறநகர் பகுதிக்கு பேருந்து சென்ற நிலையில், பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத நிலையில், பேருந்தின் பின்புற படிக்கட்டில் நின்று கொண்டு பேருந்து நடத்துனர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிகள் இதுபோல் பணியில் உள்ளபோக்குவரத்து ஊழியர்களுக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பணியின் போது பேருந்தில் புகை பிடித்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.