அரசு பேருந்தில் இருந்து குடிபோதையில் இருந்த ஆசாமியை நடத்துனர் கீழே தள்ளிய வீடியோ சமூக வளைத்தளத்தில் பரவி வந்த எதிரொலியாக நடத்துனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் போக்குவரத்து மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செய்யாறு சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணிபுரிபவர் பிரகாஷ், இவர் 477 என் கொண்ட அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
இந்த அரசுப் பேருந்து வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் சென்று மீண்டும் வந்தவாசிக்கு இரவு சுமார் 11 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வந்தது.
அப்போது நேற்று அந்த அரசுப் பேருந்தில் குடிபோதையில் ஒரு நபர் பயணம் செய்துள்ளார். அந்த நபரை அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவர் பேருந்தில் இருந்து கீழே இறங்க சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.
அப்போது திடீரென அந்த நபரை நடத்துனர் பிரகாஷ் பேருந்தில் இருந்து கீழே தள்ளி உள்ளார். அப்போது அந்த நபர் சாலையில் அப்படியே விழுந்த நிலையிலே கிடந்துள்ளார்.
இதனை பார்த்துவிட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருவதால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் ஜோசப் பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.