Categories: தமிழகம்

நிதியமைச்சரை முற்றுகையிட்டு கோஷமிட்ட நபரின் பரபர பின்னணி.. வங்கி கொடுத்த கடிதத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

நிதியமைச்சரை முற்றுகையிட்டு லோன் தரவில்லை என கூறி ஆவேசப்பட்ட நபர்.. கடனுதவி வழங்கும் விழாவில் சலசலப்பு!

கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்தவகையில் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சதீஷ் என்ற நபர் திடீரென எனக்கு லோன் கிடைக்கவில்லை என மனவேதனைபட்டு வெளியேறினார். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் சதீஷை வரவழைத்து அவருக்கு ஏன் லோன் கிடைக்கவில்லை என்ன பிரச்சனை என நிர்மலா சீதாராமன் கேட்க உத்தரவிட்டார். பின்னர் மேடையில் மைக்கை கொடுத்து அவருடைய பிரச்சனை பற்றி கூற சொன்னார்.

இதையடுத்து நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக கடனுதவி வழங்க உதவி செய்துத் தரப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் டால்க் டெல் லைப் ஸ்டைல் என்ற பெயரில் சதீஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் மகள் ஸ்மிரிதி ஆகியோரை பார்டனராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், மனவி கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்தவில்லை என்றும், மகளது வங்கி கணக்கில் ஓவர் டியூ உள்ளதாலும் சிபில் ஸ்கோர் திருப்தியாக இல்லாததால், சதீஷ் அளித்த கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளோம் என்று வங்கி மேலாளர் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சதீஷ்க்கு கடிதம் அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை மறைத்து மத்திய அமைச்சர் விழாவில் குழப்பம் ஏற்படுத்தவே சதீஷ் இவ்வாறு செய்துள்ளார் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சர் விழாவில் குழப்பம் ஏற்படுத்திய நபரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

18 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

26 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.