Categories: தமிழகம்

கால்வாயில் கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணியின் சடலம்… உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி தேவி (வயது 32) மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார். தேவி சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தேவி நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று காலை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் உள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கால்வாய் சிலாப்க்கு அடியில் பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஏஎஸ்பி உதயகுமார் தலைமையிலான போலீசார் கால்வாய் சிலாப்க்கு அடியில் சிக்கி கொண்ட சடலத்தை கடப்பாரை கொண்டு சிலாப்பை அகற்றி பார்த்தபோது கால்வாயில் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கர்ப்பிணியாக இருந்த தேவியை கால்கள் கட்டி, நிர்வாணமாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: போக்கு காட்டிய சிறுத்தை : வனத்துறை வைத்த கூண்டு.. 5 நாட்களுக்கு பின் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.