Categories: தமிழகம்

கேள்வி கேட்ட கவுன்சிலர்… மேடையில் இறங்கி ஓடி வந்து தாக்கிய எம்எல்ஏ : திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு!

கேள்வி கேட்ட கவுன்சிலர்… மேடையில் இறங்கி ஓடி வந்து தாக்கிய எம்எல்ஏ : திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு!

சென்னை திருவெற்றியூரில் மேற்கு பகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவெற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் பேசிக் கொண்டிருந்தபோது திமுக மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் திமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்குவதில்லை என குற்றம் சாட்டினார்.

எம்எல்ஏ நிதி ஒதுக்காததால் தனது வார்டில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அனைவரும் முன்னிலையிலும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அவர், எதுவாக இருந்தாலும் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கவேண்டும், தொகுதி வளர்ச்சி குறித்து பேசுவதற்கான இடம் இது இல்லை எனவும், பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலையிட்டு பதில் அளித்தார்.

இதனால் திமுக எம்எல்ஏவுக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.