Categories: தமிழகம்

கத்தி சைஸ் கூட இல்ல… பைக்கில் வந்த தம்பதியை கத்தியை காட்டி செல்போன், பணம் வழிப்பறி : 2 சிறுவர்கள் கைது!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (26:07:2023) அன்று மாலை 04:00 மணியளவில் ஒரு தம்பதியினர் நடந்து வந்த போது 3 பேர் சேர்ந்து கத்தி மற்றும் பீர் பாட்டில் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் ரூபாய் 5000 பணம் பறித்து தப்பி ஓடிவிட்டனர்.

உடனே தம்பதியினர் திருவலம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி ஆலோசனைப்படி காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் திருவலம் காவல்
உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை காவலர் செந்தில்குமார் திருவலம் பகுதியில் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருவலம் கூட்ரோடு பகுதியில் சந்தேகம் படும் படியாக 3-பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தனர். உடனே 3 பேரை திருவலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணைக்கு பின் கரிகிரி மலை அடிவாரத்தில் கத்தி மற்றும் பீர் பாட்டில் காட்டி செல்போன் மற்றும் பணம் பறித்தது ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்கள் காட்பாடி கசம் பகுதியை சேர்ந்த வேதகிரி மகன் நவீன்குமார் வயது-19 மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.