மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டுநரை முட்டி தூக்கி வீசிய பசு மாட்டின் சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில் ஆங்காங்கே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை மற்றும் பிரதான சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலையும் காணப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்ததன் பேரில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் ஒரு சில நேரங்களில் மட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து வருகிறார். கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம் சிறுமுகை சங்கர் நகர்பகுதியில், சாலையில் இரண்டு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென எதிர்பாராத விதமாக இரண்டு சக்கர வாகன ஓட்டுநரை முட்டி தூக்கி வீசியது.
இதில், இரண்டு சக்கர வாகனம் சற்று தூரம் சாலையில் இழுத்துச் சென்றது. இதில், ஆண் பெண் குழந்தையென மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. குழந்தை உடன் வந்த ஆண் பெண் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்று உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.