மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியிருந்தபோது, அவரது 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், வழக்கம்போல நடைபயிற்சிக்கு சென்ற சுதா, மாநிலங்களவை எம்.பி. கவிஞர் சல்மாவுடன் தமிழ்நாடு இல்லம் அருகே உள்ள போலந்து தூதரகம் முன்பு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து, எம்.பி. சுதாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சாவகாசமாக தப்பிச் சென்றார். உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு எம்.பி.யின் உதவியுடன் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது.இந்நிலையில், தீவிர விசாரணையை மேற்கொண்ட டெல்லி காவல்துறை, நகையை பறித்த குற்றவாளியை கைது செய்துள்ளது. மேலும், திருடப்பட்ட 4 பவுன் தங்கச் சங்கிலியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் விரைவான நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.