Categories: தமிழகம்

கனிம வளத்துறை அதிகாரிகளின் நெருக்கடி.. தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கல் குவாரி சங்கம் முடிவு!!!

கனிம வளத்துறை அதிகாரிகளின் நெருக்கடி.. தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கல் குவாரி சங்கம் முடிவு!!!

கனிம வளத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால் கல் குவாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கோவை மாவட்ட கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவா் கே.சந்திரபிரகாஷ் கூறும்போது, கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷா்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக கல் குவாரிகள் மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குவாரிகளை அளவீடு செய்து அபராதம் விதித்தல், பா்மிட் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளுக்குகூட தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி ஒரு வாரம் வேலைநிறுத்தம் நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கனிம வளத் துறை செயலா் மாற்றப்பட்டு புதிய செயலா் நியமிக்கப்பட்ட பிறகு முன்பைவிட பிரச்னை மேலும் அதிகமாகி உள்ளது. கல் குவாரிகள் விதிமீறலுக்காக சுமாா் ரூ.1,200 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிராவல் மண் எடுப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த பிரச்னை தொடா்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, மாநில அளவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மாவட்ட வாரியாக கனிம வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் வழங்கப்படும் பா்மிட் அடிப்படையில்தான் கற்கள் எடுக்கப்படுகின்றன. குவாரிகளுக்கு முறையாக ராயல்டி சிலிப் தர வேண்டும். கனிம வளத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வரும் நிலையில், குவாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பது சரியல்ல.

முறையாக தொழில் செய்யவிடாமல் தொடா்ந்து நெருக்கடி தருவதால் குவாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வு கண்டு, தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.