தமிழகம்

தீராத சந்தேக வெறி… சிறுவனுக்கு 19 இடங்களில் சூடு வைத்த கொடூர தந்தை..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தூர் மேலத்தெரு சேர்ந்தவர் ராஜ் கண்ணன். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா இவரது 10 வயது மகன் அமுதன் ஆகியோர் ஒரத்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராஜ்கண்ணன் தாயார் வரதட்சனை கேட்டு மருமகள் உமாவை அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ராஜ்கண்ணன் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் மகனை படித்து வைத்துள்ளார் .

ராஜ்கண்ணன் தனது மனைவியை சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் . மனைவி மீது சந்தேகபட்டு தனது மகன் அமுதனை தோசை கரண்டியில் சூடு வைத்து மகன் அமுதன் உடம்பில் 19 இடத்தில் சூடு வைத்துள்ளர்.

இதனால் அமுதன் துடி துடித்து கதறியுள்ளார் இதனைப் பார்த்து தாய் கதறி அழுது தனது மகனை பலத்த காயங்களுடன் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமத்திற்கு வந்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பலத்த காயங்களுடன் அமுதன் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாக தனது மகனை 19 இடத்தில் தீயால் சுட்ட தந்தையால் பலத்த தீக்காயங்களுடன் மகன் அமுதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.