Categories: தமிழகம்

ஏம்பா குடிக்கற..இனி குடிக்காத பா : அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை.. ஷாக் சம்பவம்!!

மதுகுடிக்காதே என தகப்பனிடம் கூறிய 2 பிள்ளைகளையும் தந்தையே கட்டையால் அடித்து கொன்ற கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (வயது 16) ,நதியா (வயது 14), தீனா வயது 11, தீபா (வயது 9) என்ற 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கோவிந்தராஜனின் மனைவி ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள குடோனில் குப்பை பிரிக்கும் வேலை செய்து வருகிறார். கோவிந்தராஜ் கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி அவ்வப்போது தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.

இதில் கோவிந்தராஜன் இரண்டாம் மகள் நதியா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு இறந்துவிட்டார். நதியா எப்படி இறந்தார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரகடம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

மூத்த மகள் நந்தினி வாலாஜாபாத் மாசிலாமணி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வாரணாசி அருகே உள்ள தாழம்பட்டு அரசு பள்ளியில் தீனா 6 வது வகுப்பும், தீபா 4ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரகடம் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் மது அருந்திக் கொண்டிருந்த போது, பள்ளியிலிருந்து வந்த இரண்டு மகள்களும் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு மது குடித்துக் கொண்டிருந்த தன் தந்தையிடம் ஏன் மது குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கின்றாய் என சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த கோவிந்தராஜ் அருகே இருந்த ரிப்பர் கட்டையை எடுத்து தன்னுடைய இரண்டு மகள்களையும் தலையிலும் மார்பிலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த நந்தினியும் தீபாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்கள். மகள்களை அடித்து கொன்று விட்டு வீட்டினுள் உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மீதி மதுவை கோவிந்தராஜ் அருந்திக் கொண்டிருந்தார்.

மகன் தீனா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள் தாழ்ப்பாள் போட்டு உள்ள படியால் தனது பாட்டி அம்பிகாவையும் பக்கத்து வீட்டில் உள்ள கோபால் என்பவரையும் அழைத்து என்ன ஏது என கேட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து கதவை தட்டியபோது, கதவை திறந்துகொண்டு கோவிந்தராஜ் தப்பி ஓடி ஓரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தகவலை அறிந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் நந்தினி மற்றும் தீபாவின் உடல்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கோவிந்தராஜிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ் தன் மகள்கள் என்றும் பாராமல் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மண்ணெண்ணெய் ஊற்றி இறந்துபோன நதியா என்ற மகளையும் கோவிந்தராஜ் தான் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகமும் அவருடைய உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.