திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (60). இவரது மனைவி அமலோற்பவமேரி (48). தம்பதியருக்கு மகன் சார்லஸ். இவர் பனியன் நிறுவனம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் ரூ. 15 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
சார்லஸிடம் கடன் கொடுத்தவர்கள், பணம் கேட்க அவர் திருப்பூர் மாநகரின் வேறு பகுதியில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சார்லஸிடம் பணம் கொடுத்தவர்கள் அவர்களது பெற்றோரிடம் பணம் கேட்டு நச்சரிக்கவே, இருவரும் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில் தம்பதியர் விஷம் அருந்தியதாக தெரிகிறது. இதனை அலைபேசி வழியாக மகனுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் அருந்திய நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலோற்பவமேரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.