தமிழகத்தில் போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம்,அரப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது .
இதில் நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், எல்.முருகன், கார்த்தியாயினி, நயினார் நாகேந்திரன் ,எச்.ராஜா ,உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, பொன் .ராதாகிருஷ்ணன், இயற்கை விவசாயி தமிழகத்தை சேர்ந்த நம்வாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,
மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கதக்கது.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறுவதும் ஏமாற்றும் வேலையாகும். கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பாக தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்துள்ளனர் . இது தமிழுக்கு பெருத்த அவமானம். மேலும் தமிழக அரசு செயல்பாடுகள் சரியானவையாக இல்லை.
தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா அபின் மதுவகைகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சணையும் ஏற்படுகிறது.
போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.