திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஜனாதிபதி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். தமிழக மக்கள் சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றத்திற்கு என்று ஒரு அதிகாரமும், ஆளுநருக்கு என்று ஒரு அதிகாரமும், ஜனாதிபதிக்கு என்று ஒரு அதிகாரமும், முதலமைச்சருக்கு என்று ஒரு அதிகாரமும் உள்ளது.
இது அனைத்தும் அரசியல் அமைப்பின் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் 142 உச்சநீதிமன்றத்தால் இந்த நாட்டிற்கு ஏதேனும் அநியாயம் நடைபெற்றுள்ளது என ஜனாதிபதி நினைத்தால், தாமாகவே வழக்கை எடுத்து தீர்ப்பு வழங்கலாம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது ஜனாதிபதிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. தற்போது 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டம் 145ஐ பயன்படுத்தி 5 நீதிபதிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து பதில் அளிக்கலாம். இந்திய ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதிகள் 15 முறை உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். 1991 ஆம் ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை குழு தீர்ப்பளித்தது.
அன்றைய முதல்வர் பங்காரப்பா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அரசியல் அமைப்பு சட்டம் 143 பயன்படுத்தப்பட்டு கர்நாடகா அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பாரத பிரதமர் இதயத்தில் தனி இடம் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியில் வீடு புகுந்து கொலை செய்கிறார்கள். தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது. சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.
தமிழகம் கொலை காடாக மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. சட்டம் ஒழுங்கு காரணமாக 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றலாம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
உதித் நாராயணன் சார் நீங்களா? நேற்று முன்தினம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில்,…
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறையில் பலத்த பாதுகாப்பையும்…
சூரியின் “மாமன்” சூரி கதாநாயகனாக நடித்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த…
காலம் கலிகாலம் என்பது ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே உள்ளது. பாடம் கற்பிக்க வரும் மாணவர்கள் மீது ஆசிரியைகள் தவறான எண்ணங்களை…
மதுரையில் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
சூரியின் “மாமன்” பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரிக்கு…
This website uses cookies.