தூய்மை பணியாளருடன் காதல் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவர் : சத்தம் இல்லாமல் கிளினிக்கில் மருத்துவ முத்தம்.. வெளியான வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2021, 11:53 am
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் குருசாமி என்பவர் பணி நேரத்தில் அங்கு பணியாற்றும் தற்காலிக பெண் தூய்மை பணியாளருடன் சல்லாபத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, அதற்கு பாதுகாப்பாக இருக்க மற்றொரு ஒப்பந்த பெண் ஊழியர் நீலவேணி என்பவரை கட்டயப்படுத்தி அவருக்கும் தொந்தரவு கொடுத்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
தூத்தக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியாற்றி வருபவர் குருசாமி (வயது 51). மேலும் அவர் இளையரசனேந்தலில் தனியாக ஸ்ரீ முத்தையா கிளினிக் என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருடன் பணிநேரத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதும், இருவரும் அவ்வப்போது கசமுசாவில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் அறைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக நீலவேணி என்பவரை வெளியில் பாதுகாப்புக்காக நிற்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பணி நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளருடன் மருத்துவர் குருசாமி நெருக்கமாக ஒன்றாக இருக்கும் கசமுசா வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நீலவேணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மருத்துவர் குருசாமி மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் மருத்துவரும், தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளருடன் இருப்பதை தான் பார்த்து விட்டதால் தன்னை பழிவாங்கும் விதமாக தினந்தோறும் இருவரும் உள்ளே சென்றதும், அறைக்குள் யாரும் செல்லாமல் தடுக்கும் வகையில் தன்னை பாதுகாவலுக்கு நிறுத்தி வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் உள்ள வீடியோ தான் எடுத்துவிட்டேன் என்று கூறி தனது செல்போனையும் திருடி வைத்து விட்டதாகவும், தனக்கு விடுமுறை கூட கொடுக்கமால் வேண்டும் என்றே தன்னை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாகவும், தான் அவருக்கு அடி பணிய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான் மறுக்கவே தன்னை அவதிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பணி நேரத்தில் மருத்துவபணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் அருகே உறங்குவது என பல இன்னல்களை கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
நீலவேணியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் அசிங்கமான வார்த்தையினால் அவதூறாக பேசுதால், கொலை மிரட்டல், செல்போன் காணமால் போனது, பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் குருசாமியை கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் தனது காதல் சிகிச்சைக்காக தனது பணியாளரையே பணியவைத்தும் அதை பாதுகாக்க பெண் பாதுகாவலரை நியமித்து அந்தரங்க விளையாட்டை அரங்கேற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1
0