புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருங்குடி ஆவணத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மாடு மீது மோதிய வேகத்தில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது விழுந்ததில் கணுக்காலில் அடிப்பட்டது.
இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தையல் போடப்பட்டது. எனினும் வலி அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
காலில் ஏற்பட்ட காயத்திற்கு போட்ட தையலில் ஜல்லி கற்கள் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் கற்கள் இருப்பதை கூட கவனிக்காமல் மருத்துவர்கள் சிகிச்சையளித்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை மீது அதிருப்தியையும், அச்சத்தையும் கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.