Categories: தமிழகம்

ஏரி ஆக்கிரமித்ததாக கூறி தந்தை செய்த செயல்… 60 கி.மீ சைக்கிளில் மகளுடன் சென்று அரங்கேற்றிய நாடகம் : இறுதியில் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தான் ஆக்கிரமித்த ஏரி பகுதியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக தன் மகளையே 60 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்ட வைத்து புகார் அளிக்க வந்த மாணவியிடம் உண்மை நிலையை புரிய வைத்த அதிகாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி செம்மொழி என்பவர் அன்னப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அன்னப்பள்ளம் கிராமத்திலிருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிதிவண்டி மூலம் பயணம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டு அவரது தந்தை புவனேஷ் உடன் சமூக ஆர்வலர்களும் இணைந்து அன்னப்பள்ளம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் அளவுள்ள ஏரியில் 5 ஏக்கர் ஏரியை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக பதாகைகளை ஏந்தியும் 7-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி செம்மொழி 60 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க புறப்பட்டார்.

இந்த செய்தி அனைத்து சமூக ஊடகங்களிலும் பரவியது. அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு கொடுக்க மதியம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுமி மற்றும் அவரது தந்தை புவனேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது பதில் அளித்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அந்த ஏரி அக்கிரமிப்புகளை செய்தது முதலில் உன் தந்தை தான் அதன் பிறகு தான் அனைவரும் செய்துள்ளனர்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உன் தந்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கோழி பண்ணையையும் சேர்த்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டது என்று கூறியதை அடுத்து அங்கிருந்து கீழே வந்த செம்மொழியின் தந்தை என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்கும் போது முன்னுக்குப் பின் பதிலளித்தார்.

எங்களை திசை திருப்பவே இதுபோன்று குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்றும் அங்கு நான் கோழி பண்ணை வைத்திருக்கவில்லை கோழி கூண்டு மட்டும் தான் வைத்திருக்கிறேன் என்று மழுப்பலான பதிலை கூறியதோடு தவளை தன் வாயால் கெடும் என்பது போல பேட்டி கொடுத்தார்.


நமக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற கோபத்தில் சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு சிறுமியை 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி வர செய்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகசுளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று தவறான வழிகாட்டுதலால் மாணவர்களின் மனநிலையும் தவறான வழியில் செல்லும் என்பதற்கு இதுவே உதாரணம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.