தாறுமாறாக வந்த கார் : பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்திய ஓட்டுநர்.. தூக்கி வீசிய பாதசாரி.. ஷாக் வீடியோ!!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று L Board கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அதிவேகமாக வந்து சாலையோரம் நடந்து வந்த பாதசாரியை அடித்துத் தூக்கி வீசியது.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றது. பட்டப்பகலில் சென்னையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சாலையில் நடந்து சென்ற பழனி என்ற நபர், தன்னை நோக்கி கார் வருவதை பார்த்து சுதாரிப்பதற்குள், அதே நொடியில் காரில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்றதாக விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.