தாறுமாறாக வந்த கார் : பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்திய ஓட்டுநர்.. தூக்கி வீசிய பாதசாரி.. ஷாக் வீடியோ!!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று L Board கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அதிவேகமாக வந்து சாலையோரம் நடந்து வந்த பாதசாரியை அடித்துத் தூக்கி வீசியது.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றது. பட்டப்பகலில் சென்னையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சாலையில் நடந்து சென்ற பழனி என்ற நபர், தன்னை நோக்கி கார் வருவதை பார்த்து சுதாரிப்பதற்குள், அதே நொடியில் காரில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்றதாக விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
This website uses cookies.