சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தில் தனியார் கார்கோ நிறுவனம் உள்ளது.
இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து உதிரிபாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேற பகுதிக்கு டெலிவரி எடுத்து செல்வது வழக்கம் அந்த வகையில் இரவு சென்னை எர்ணாவூரை சேர்ந்த எழில்ராஜ் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பொருட்களை இரக்க நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் சரக்குகளை இறக்கி வைத்துள்ளார்.
பின்னர் மீண்டும் வாகனத்தை வெளியே எடுப்பதற்காக ஸ்டார்ட் செய்துவிட்டு அருகே உள்ள வாகனத்தில் இந்த வாகனம் இடித்துவிட போகிறது என்பதற்காக கீழே இறங்கி பார்த்துள்ளார்.
அப்போது திடீரென வாகனம் முன்னாள் சென்று அருகே இருந்த மற்றொரு வாகனத்தில் முட்டி நின்றது. இதில் எழில்ராஜ் தான் ஓட்டி வந்த சரக்கு லாரியின் கதவில் சிக்கிக்கொண்டது இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
எழில்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு எழில்ராஜ் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இந்த சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் எழில்ராஜிற்கு திருமணமாகி ஒராண்டு ஆன நிலையில் அவர் உயிர் இழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.