பழனி மலைக்கோவில் பாறையில் ஏறி மேலே சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக படிப்பாதை, மின் இழுவை ரயில் ,ரோப்கார் ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ரோப்கார் வரிசையில் செல்வது போல் பாசாங்கு செய்து அருகில் இருந்த பாறைகளின் வழியே ஏறி வேகமாக ஆபத்தான முறையில் மலைமீது ஏறினார்.
இதுகுறித்து அங்கு இருந்த பக்தர்கள் கோவில் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செக்யூரிட்டிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் போதை ஆசாமியை விரட்டிப்பிடித்து கீழே அழைத்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் போதை ஆசாமியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மதுபான பாட்டில் இருந்ததும், குடிபோதையில் மலைக்கோவிலுக்கு மேலே சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.