கோவை : நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ஓட்டுநரான இவர் தன் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராக நேற்று கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்பு சத்தம் போட்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார்.
இதனைப்பார்த்த கோர்ட் ஊழியர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் குடிபோதையில் சத்தமிட்டு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு கோர்ட்டில் நடைபெறும் பணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற மாண்புகளை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பொது அமைதியை சீர்குலைத்தல், நீதிமன்ற அவமதிப்பு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.