விழுப்புரம் : பயன்பாடு இல்லாமல் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கோவில் வாசலில் படுத்திருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு முதியவர் படுகாயமடைந்தார்.
விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு LIC அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து விட்டு படுத்திருந்த இரண்டு முதியவர்களான விழுப்புரம் காலேஜ் ரோடு பகுதியை செர்ந்த கணேசன் (வயது 52), கடலூர் ஓ.டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(வயது 70) ஆகியோர் மீது அருகில் இருந்த, மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கணேசன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இரண்டு கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த ராமலிங்கம் என்ற முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியாம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.