வனவிலங்குகளுக்காக வயலில் கொளுந்தனார் வைத்த மின்சார கம்பி… பறிபோன தம்பி மனைவியின் உயிர்!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரை கோட்டை வாளையம்பள்ளம் பகுதியை சேர்ந்த அம்பிதுரை (45) இவரது மனைவி அனிதா (35) , இவர்களுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது , இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இவரின் நிலத்தின் அருகே இவரது கணவரின் பெரியப்பா மகனான ரமேஷ் என்பவர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ரமேஷ் மக்காச்சோளத்தை பயிரிட்டு பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க வயலை ஒட்டி இரும்பி கம்பி கட்டி அதில் மின்சாரம் பாய்ச்சியதாக கூறப்படுகிறது.
அந்த தீவன பயிர்களுக்கு நீர் பாய்ச்ச இன்று காலை அனிதா தோட்டத்திற்கு சென்று நீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு செல்லும் போது கம்பி உள்ளதை அறியாத அனிதா தெரியாமல் அந்த கம்பியை மிதிக்க உடலில் மின்சாரம் பாய்ந்து அனிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல்துறையினர் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.