கோவை : மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டுயானை கிராமத்தினுள் நுழைந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடையின் வெப்பம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி துவங்க ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக வன உயிரினங்களான காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு தற்போதே வெளியேறி வருகின்றன. அந்த வகையில் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் நேற்று இரவு 9மணி அளவில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்தது அங்குள்ள கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற யானையை பார்த்த தெருநாய் குரைத்த நிலையில் காட்டுயானை அந்த நாயை மிகுந்த ஆக்ரோசமாக துரத்தியது.
இதனை கண்ட மக்கள் வீட்டினுள் சென்று விட அந்த யானை அங்கிருந்து நகர்ந்து கல்லார் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு 9 மணிக்கு காட்டு யானை சாலை நடந்து வந்ததை பார்த்து அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.