திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் சரணடைந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சோழவரம் போலீசார் புழல்சிறையில் அடைத்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம்
UK சிட்பண்டு (உமேஷ் குமரன் என்பவரின் பெயரில் அவரது தாய் பஞ்சவர்ணம்செல்வி குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 9 பேர் மாதாந்திர ஏலச் சீட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிவந்த நிலையில், சுமார் நான்கு கோடி ரூபாய் பணத்தை கட்டிய பொதுமக்களுக்கு, அதனை திருப்பி தராமல் மகனுக்கு திருமணம், கணவருக்கு ஆப்ரேஷன் என ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை அம்பத்தூரில் உள்ள மாநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் செல்வி சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சோழவரம் போலீசாரின் பாதுகாப்புடன் அவரை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்து தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை கைது செய்து பணத்தை தங்களுக்கு மீட்டு தரவேண்டும் என போலிசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ஏலச்சீட்டு பணம் வசூலித்த நாகபாண்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பஞ்சவர்ணம் செல்வி சரணடைந்துள்ளார். மீதம் உள்ள 8 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தங்களுக்கு பணம் கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.