14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை… கருவை கலைக்க முடியாததால் குழந்தை பெற்றெடுத்த கொடுமை!
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான தந்தை. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2 மகன்கள் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தந்தை தான் பெற்ற மகள் என்றும் பாராமல் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கற்பம் அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் முதல், தந்தை தலைமறைவானார் .
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை தேடி வந்தனர்.கடந்த ஏழு மாதமாக தலைமறைவாக இருந்த தந்தையை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.