தமிழகம்

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வன்னியர் சங்கம் 1980ல் தொடங்கிய காலத்தில் வாரம் முழுவதும் மருத்துவ சேவையாற்றிய தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

இதையும் படியுங்க: பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

இனிமே பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பினை தானே எடுத்து கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமனம் செய்துள்ளார்.

அன்புமணியை பதவி நீக்கம் செய்த காரணத் கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன் என பேசும் போது, பாஜகவுடன் கூட்டணியா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன், நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

ராமதாஸ் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பாமக பொதுக்குழு கூட்டத்தின் போது ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அப்போது பாமக இளைரணித் தலைவராக ராமதாஸ் தனது சகோதரி மகன் முகுந்தனை அறிவித்த போது, மேடையிலேயே எதிர்த்து பேசியிருந்தார் அன்புமணி,.

இந்த நிலையில் ராமதாஸ் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக முதல் குரலாக பாமக பொருளாளர் திலகபாமா பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த முடிவு சரியே, அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான்.. ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம். அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.

நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், தனி நபர்களை விட தலைமை பெரியது, தலைமையை விட இயக்கம் பெரியது, இயக்கத்தை விட சமூகம் பெரியது . சமூக நலன் காக்கப்பட வேண்டுமென்றால் அது அன்புமணி தலைமையில் மட்டுமே, டாக்டர் அன்புமணி வழியில் நாம் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.