விருத்தாச்சலம் : பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து தாக்குதல் நடத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் தூக்கி வீசி சென்ற குற்றவாளிகை கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி உறவினர்கள் பாமகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகளுக்கும் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு வரும் 10ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் விருத்தாச்சலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை தூக்கி சென்று விருத்தாசலம் அருகே கார்மாங்குடி வெற்றாற்று அருகே டூ வீலரில் கடத்தி சென்றுள்ளார்,.
இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு பையில் வைத்திருந்த சுத்தியால் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து கும்பல் சுத்தியல் போன்ற ஆயுதங்களால் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்மாங்குடி ஆற்றங்கரையில் தூக்கி வீசி சென்று விட்டனர்.
அருகில் வயலில் வேலை பார்த்த விவசாயிகள் பார்த்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உயர்சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இளம்பெண் சுயநினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி அருகே ஊர் பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலூர் விருத்தாச்சலம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணையில் பெண்ணை ஸ்ரீதர் ஒரு தலையாக காதலித்தாகவும், திருமண செய்தியை அறிந்து பெண்ணின் வாழ்க்கை நாசமாக்க கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்து தலைமறைவான அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.