Categories: தமிழகம்

என் மேலயே கை வைக்கறியா? உன் பொண்டாட்டி உசிரோட இருக்க மாட்டா : ஓடும் ரயிலில் பயணிகளை மிரட்டிய கும்பல்!

கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரமாபிரபா. இவர்கள் சென்னையில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு கேரள மாநிலம் செல்லும் 22639 எண் கொண்ட அலெப்பி விரைவு ரயிலில், திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் 6 இளைஞர்கள் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏறி, கழிவறை அருகே நின்றுக்கொண்டு புகைப்பிடித்து கொண்டும், அதிக ஒலியில் சினிமா பாடல்கள் பாடியவாறு ஆட்டம் ஆடி கொண்டு வந்துள்ளனர்.

இதனால், அந்த பெட்டியில் உறங்கி கொண்டிருந்த ரயில் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.இந்நிலையில் ரமாபிரபா அந்த இளைஞர்களிடம் கைக்குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் இருப்பதால் அமைதியாக வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு செவி சாய்க்காத அந்த இளைஞர்கள் ரமாவிடம் தகராறில் ஈடுபட துவங்கி உள்ளனர். மேலும் மணிகண்டனைய தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமா, ரயில் பயணித்து கொண்டிருந்த அவரது தம்பியை அழைத்துள்ளார். அந்த இளைஞர்கள் அவரது தம்பியையும் தாக்கி தகராறு செய்துள்ளனர்.

பின்னர் திருப்பூர் ரயில் நிலையத்தில் அந்த இளைஞர்கள் இறங்கி சென்றுள்ளனர்.இச்சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ரமாபிரபா, ரயிலில் நடந்த சம்பவத்தை விவரித்தார். மேலும் இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் போது அருகில் இருந்த ஓரிருவர் மட்டுமே உதவிக்கு வந்ததாகவும் பலரும் உதவ வரவில்லை என்றார்.

மேலும் நேற்றைய தினம் ரயிலில் ரயில்வே போலிசாரும் இல்லை என வருத்தம் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்டது தமிழ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் என குறிப்பிட்ட அவர் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.