வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
கோவை மருதமலை சாலை நவாவூர் அருகே சரஸ்வதி மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் பாலாஜி (வயது 42). கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மளிகைக்கடைக்கு எதிரே உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் கோகுல்ராஜ் என்ற இளைஞர் வந்து பிஸ்கட் வாங்கி சென்று உள்ளார்.
சிறிது நேரத்தில் கோகுல்ராஜ் பெயரை சொல்லி கடைக்கு வந்த நபர் பணத்தை சில்லறை கொடுக்கும் பொழுது தவற விட்டு சென்றதாக கூறி பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.
உன்னை எனக்கு தெரியாது நீ சென்று கோகுல்ராஜை வரச்சொல் என்று கூறி அனுப்பி உள்ளார். மேலும் கடையில் தேடி பார்த்த பொழுது கோகுல்ராஜ் தவற விட்ட பணம் 6 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர் வேலை செய்யும் நிறுவன உரிமையாளருக்கு பணத்தை விட்டு சென்ற கோகுல்ராஜ் பற்றி கூறி பொறுப்புடன் இருக்க சொல்லும்படி கூறியுள்ளார் பாலாஜி.
இது குறித்து கோகுல்ராஜ் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுல்ராஜை அழைத்து கண்டித்து உள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர் தன் நண்பரை அழைத்துக்கொண்டு மளிகைக்கடைக்குள் புகுந்து பாலாஜியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர்.
தற்போது மிளிகைக்கடைக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் கடைகாகாரரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.