கோவை: மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை காதில் பூ சுத்தி கொண்டு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுத்தி கொண்டும் மனுக்களை கழுத்தில் அணிந்தவாறும் நூதன முறையில் மனு அளிக்க வந்திருந்தனர். இது குறித்து கூறிய அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுத்திக்கொண்டும், இதுவரைக்கும் அளித்த மனுக்களை மாலையாக அணிந்துக்கொண்டும் வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சீராக அமல்படுத்தி நடத்தி வருகிறது என கூறிய அவர்கள் சில அரசு அலுவலர்கள் அரசுக்கு அவபெயர் ஏற்படுத்தும் வகையில் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுமில்லை எனவும் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவிதமான பதிலும் தருவதில்லை என குற்றம் சாட்டினர்.
பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.