திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சூரியகுமார் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவருடன் சூரிய குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி சூரியகுமார் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்க வைத்திருக்கின்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒட்டன்சத்திரம் விரைந்து சென்று சூரியகுமாரையும் சிறுமியையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் சூரிய குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று குழந்தை இருப்பதும் , சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று விடுதியில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தெற்கு மகளிர் காவல் துறையினர் சூரிய குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.