Categories: தமிழகம்

விண்ணை பிளந்த பாரத் மாதா கி ஜே கோஷம் : முத்துப்பேட்டையில் தொடங்கியது பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் : 3 ஆயிரம் போலீசார் குவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடத்தப்படும் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விநாயகர் சிலை ஊர்வலமாக இந்து முன்னணி இந்த ஊர்வலத்தை நடத்துகிறது. நேற்று ஜாம்பவானோடை சிவன் கோயில் அருகில் இருந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.

முன்னதாக அங்கு நடைபெற்ற தொடக்க கூட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர், கருப்பு முருகானந்தம், தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்துமுன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உட்பட 19பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன

ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமனி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்துக்காக கடந்த ஒரு வார காலமாக போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணிகளை செய்து வைத்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மேலும் கொடி அணிவகுப்பும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஊர்வலத்தின்போது, வஜ்ரா வாகனங்களும் விநாயகர் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தன. திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் மேற்பார்வையில், திருச்சி டிஐஜி சரவணன், தஞ்சை டிஐஜி கயல்விழி ஆகியோரின் வழிகாட்டலில் திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார் குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரும்பலூர், கரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 9 எஸ்பிகள், 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள், நூறுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதுபோல், மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதியில் 110 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை லகூன் அலையாத்தி காடுகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் கண்காணிப்புகள் செய்யப்பட்டன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.