திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடி ஊராட்சி சாய் நகரில் வாடகை வீட்டில் வசித்த வௌிமாநில லாட்டரி டிக்கெட் புரோக்கர் நரசிம்மராஜ் (வயது 37) தனது சொந்த வீட்டை விற்று அதில் கிடைத்த 28 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு செலவு செய்து வந்துள்ளார்.
இதனை அவரின் மனைவி சிவரஞ்சனி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்து, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தனது தாய் வசந்தகுமாரி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திராவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆந்திர பகுதியில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படையினர் ஆந்திராவில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிணத்தை மறைத்து வைத்த தனது வீட்டின் நிலை என்ன என்பது குறித்து தொிந்து கொள்ள நோட்டமிடுவதற்காக சாய் நகருக்கு நரசிம்மராஜ் தனது தாயுடன் வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.