தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தேவாரம் கனரா வங்கியில் நகை அடகு வைக்க சென்றபோது, வங்கிக்குள்ளேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவன் வெள்ளைச்சாமி பிரேமலதாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரேமலதாவுக்கு தேவாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவாரம் காவல்துறையினர் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருவதுடன், தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்ததாகவும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்குள் புகுந்து மனைவியை கணவன் வெட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.