காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் கணவரின் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள நல்லப்பா நகர் 3வது வீதியில் குடியிருந்து வரும் ஹரிராஜ் (வயது 28) என்பவர் நர்மதா (வயது 28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கொங்கு மெயின்ரோடு பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் கணவரின் பெற்றோர் தன்னை கொடுமை படுத்தி வருவதாகவும் ஆடி சீருக்கு நர்மதாவின் அம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே விட்டுவிட்டு ஹரிராஜ் வந்துவிட்டதாகவும் கணவரின் பெற்றோர் தன்னை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நர்மதா புகார் அளித்துள்ளார்.
எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து பாண்டியன் நகரில் உள்ள ஹரிராஜ் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து நர்மதா போராட்டத்தை கைவிட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.