Categories: தமிழகம்

எல்லாரும் பாத்துட்டாங்க.. கள்ளக்காதல் ஜோடியின் அட்டகாசம்.. கணவனுக்கு பாடை கட்டிய மனைவி..!

பெருநகர் அருகே கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்ட கள்ளக்காதலன். மனைவியின் கள்ள காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்த சம்பவத்தால் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது 30) இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெய சத்யா (வயது 25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ராம்குமார், ஜெய சத்யா தம்பதி இருவருக்கும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இவர்களது காதல் திருமணத்தை அதே பகுதியை சேர்ந்த ராம்குமாரின் நண்பர் குறளரசன் (வயது 30) முன் நின்று செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், குறளரசனுக்கும் ஜெய சத்யாவுக்கும் இடையே கள்ள காதல் மலர்ந்துள்ளது. இது அரசல் புரசலாக ராம்குமாருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், குறளரசன் மற்றும் ஜெய சத்யா இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குறளரசன் சமூக ஊடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்து ராம்குமார் அதிர்ந்து போய் உள்ளார்.

உடனே வீட்டிற்குச் சென்று மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஜெய சத்யா முறையாக பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த ராம்குமார் குறளரசனை தேடிச் சென்று அவரிடம் இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறளரசன் ராம்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்து போன ராம்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமாரை மீட்ட அவரது உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டு ராம்குமாரின் உடல் இன்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராம்குமாரின் மரணத்திற்கு காரணமான குறளரசனை கைது செய்ய வலியுறுத்தி , சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி, ராம்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நவியது.

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதோடு அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் கள்ளக்காதலியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருநகர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

10 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

31 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.