தமிழகம்

தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பெண்கள் உயிரிழந்த விவகாரம்… மாநகராட்சி நோட்டீஸ் : கட்டிட உரிமையாளர் காட்டமான பதில்!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்ரா பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதியில் நேற்று குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி முயற்சியில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் வேறொரு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து விபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளர் தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கட்டிடத்தின் உரிமையாளர்களில் நானும் ஒருவன். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் தற்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்களுக்கு உண்மையிலேயே வருத்தமாக உள்ளது.

நேற்று காலை நடைபெற்ற விபத்துக்கு பிறகு மதுரை மாநகராட்சி கட்டிடத்தை இடிக்கச் சொல்லி மீண்டும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது இடிப்பதற்கான ஆட்களை எல்லாம் நாங்கள் முறையாக அழைத்து வந்திருக்கிறோம்.

மதுரை மாநகராட்சியும் காவல்துறையும் இந்த கட்டிடத்தில் உள்ள அனைத்தையும் காலி செய்து கொடுத்து விட்டார்கள் என்றால் நாங்கள் எங்களது பணியை தொடங்கி விடுவோம்.

கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டிடத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் ஐந்து கடைகள் உள்ளன அதில் விசாகா விடுதிக்கு சொந்தமான கடையும் ஒன்று. இந்த கடைகள் அனைத்தும் காலி செய்து கொடுத்தவுடன் கட்டிடத்தை எடுத்து தரைமட்டமாக்கும் பணி தொடங்கும் என்றார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.