Categories: தமிழகம்

கோவை சிறையில் நடந்த கலவரத்திற்கு காரணமே ஜெயிலர்தான் : கைதிகளுக்கு நடந்த கொடுமை.. வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

கோவை சிறையில் நடந்த கலவரத்திற்கு காரணமே ஜெயிலர்தான் : கைதிகளுக்கு நடந்த கொடுமை.. வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு இடையே கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது. கைதிகளும் காவலர்களும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதில் கைதிகள் மற்றும் காவலர்கள் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் நேரில் சென்று கைதிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர்கள் சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவலர்கள் சுற்றி நின்று கைதிகளை பேசிவிடாமல் தடுத்து வருகின்றனர்.

சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகள் வழக்கறிங்களிடம் கூறியதாக சில காவலர்கள் பெயரை தெரிவித்தார். சிவக்குமார், ராகுல், சடையன், ஷாஜகான் மற்றும் சில காவலர்கள் பெயரை கைதிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறினார்.

சிறையில் இருக்கும் கைதிகளை காவலர்கள் மனித உரிமை மீறி தாக்கி உள்ளதாகவும் அந்த 7 கைதிகளில் வயிற்றில் கண்ணாடிகள்,பிளேடுகள் போன்றவற்றை உள்ளே இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.இந்த 7 கைதிகளை தனி சிறையில் அடைத்து வைத்து இரவு நேரங்களில் தூங்குவிடாமல் தண்ணீர் ஊற்றுவதாகவும் சரியான முறையில் உணவு மற்றும் மருத்துவம் பார்க்கவில்லை என காவலர்கள் மீது வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவலர்கள் சிறையில் கைதிகளின் கை,கால்களை உடைத்து சாப்பிட முடியாத அளவிற்கு சித்திரவாதம் செய்து வருவதாக கூறினார். இதனால் கைதிகளுக்கு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் என்று தெரிவித்தார். சிறையில் கைதிகளை சந்தித்து குறைகளை கேட்கச்சென்ற வழக்கறிஞர்களை ஷூவை கலட்ட கோரியும், சட்டையை கழட்ட கோரியும் சிறைக்காவலர்கள் வழக்கறிஞர்களை கைதி போல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

20 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

21 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

22 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

22 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

23 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

23 hours ago

This website uses cookies.