தமிழகம்

இதென்னடா கொங்கு மண்டலத்துக்கு வந்த சோதனை : கோவை, திருப்பூரை தொடர்ந்து ஈரோடு மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை!!

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியான நிலையில் இதுவரை 9 ஆடுகள் 1 கோழி இறந்துள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தனது வீட்டின் பின்புறம் ஆடுகளுக்கு கொட்டகை அமைத்து பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கதிர்வேல் அதிகாலை நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்த பொழுது அவர் வளர்த்து வந்த 3 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நம்பியூர் அருகே உள்ள பெருமாநல்லூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் சுற்றி திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

அதனை தொடாந்து நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். அதனால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தி கண்காணிப்பட்டு வருகிறது,

இந்த நிலையில் நம்பியூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோவை, திருப்பூர் பகுதியில் சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் சிறுத்தை புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.