திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் அமீர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இவர்கள் தங்களின் துணிகளை துவைப்பதற்காக பாண்டியன் நகர் அருகே உள்ள பாறைக்குழிக்கு சென்றுள்ளனர்.
அங்கு மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அமீருக்கும் மகாலட்சுமிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அமீர் நான் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறேன் என்று விளையாட்டு தனமாக மகாலட்சுமியை மிரட்டியுள்ளார். திடீரென கால் தடுமாறி அமீர் தண்ணீருக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் கொடிகள் அதிகம் இருந்ததால் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கணவர் தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்ட மகாலட்சுமி நடப்பதை கண்டு கொள்ளாமல் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நேரம் ஆகியும் கணவர் தண்ணீரை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த மகாலட்சுமி கூச்சலிட்டுள்ளார். மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர்.
வெகு நேரம் தேடியும் அமீர் கிடைக்காததால், இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தி்ற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி கொடியில் சிக்கியிருந்த அமீரின் உடலை மீட்டு எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் அமீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு வினையானதால் தனது கணவனை பறிகொடுத்ததை தாங்க முடியாத மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.