கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு, அதில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்து Bain என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார்.
பின்னர் தனது வங்கி விவரங்களை பதிவு செய்து ரூ. 9 லட்சத்து 8 ஆயிரத்து 100/- ரூபாயை முதலீடு செய்து உள்ளார்.
செயலியில் 32 லட்சம் ரூபாய் காட்டிய நிலையில் அந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது மேலும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி உள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்ட உணர்ந்த ராமசாமி, இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண், கிஷன் சௌத்ரி, சுனில் சரண் மற்றும் சந்தீப் குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த நான்கு பேரும் பல்வேறு வங்கிகளில் 11 வங்கிக் கணக்குகளை வைத்து இருந்து, ராமசாமியின் பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளது தெரியவந்து உள்ளது.
இவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 59 ஆயிரத்து 650/- ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த கும்பலின் வங்கி கணக்கில் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக பண பரிமாற்றம் நடந்து உள்ளது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.