வீட்டில் தனியாக இருந்த சிறுமி… நோட்டமிட்ட வடமாநில வாலிபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!
திருவள்ளூர் மாவட்டம் பரிக்குபட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத வட மாநில நபர் ஒருவர் சிறுமி தனியாக இருந்த வீட்டிற்குள் உள்ளே புகுந்த போது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து தாக்கினர்.
முறையாக அவர் பதில் அளிக்காததால் இதுகுறித்து பொன்னேரி காவல்துறைக்கு தகவல் அளித்து அங்குள்ள கோவிலில் அவரை பூட்டி வைத்து பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிராமப் பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு வட மாநில நபர் புகுந்து சிறுமியை கடத்த முயற்சி செய்தாரா என அச்சமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர் சற்று மனநலம் பாதித்தவராக உள்ளதாகவும் இந்தி பேசுபவராகவும் உள்ளதால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.