Categories: தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெறும் முக்கிய சின்னம்… கலரிலும் காப்பியா? என்ன சிறப்பு?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இருப்பினும் 2026ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்ய இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் போது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எக்ஸ் தளத்தின் வாயிலாகவும், அறிக்கையின் வாயிலாகவும் தனது கருத்துக்களையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார் விஜய்.

மேலும் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு தொகுதி வாரியாக ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

மேலும் பல நலத்திட்ட உதவிகளும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் கடைசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ள விஜய் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, மாநாட்டுப் பணிகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறப் போகும் இந்த மாநாட்டில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் பழைய கொடியில் விஜய் படத்துடன் உன்னால் முடியும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. தற்போது அரசியல்கட்சி என்பதால் இரண்டு நிறங்களுடன் கொடியும் வண்ணங்களின் நடுவே வாகை மலர் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பழந்தமிழ் நூல்களில் வாகை மலர் முக்கிய இடம் பெறுகிறது. போருக்குச் சென்றவர்கள் போரில் வெற்றி பெற்று வாகை மலர் சூடி வருவதை வாகைத் திணை தொல்காப்பியத்தில் உணர்த்துகிறது.

மேலும் விஜய் என்றாலே வெற்றி என்று அர்த்தம் எனவே விஜய் படமும், வாகை மலரும் கொடியில் இடம்பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.