வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மகன்கள் யோகித் (5), தர்ஷன் (4). யோகராஜின் நண்பர் கட்டிட ஒப்பந்ததாரரான வசந்த குமார். கடன் பிரச்சனையில் இருந்த யோகராஜ், தனது நண்பர் வசந்தகுமாரிடம் 14 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
சமீபத்தில் யோகராஜின் மகன்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வசந்தக்குமார் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பவில்லை. வசந்தக்குமாரையும் காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்குள்ள அனைத்து பகுதிகளிலும் சிறுவர்களை தேடத் தொடங்கியுள்ளனர்..
அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகே சிறுவர்கள் இருவரும் கொடூரமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் சிறுவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவர்களை அழைத்து சென்ற வசந்தக்குமாரையும் தேடி கைது செய்தனர்.
வசந்தக்குமாரிடம் யோகராஜ் 14 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை திரும்ப தருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் யோகராஜின் குழந்தைகளை வசந்தக்குமார் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது.
14 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நண்பரின் மகன்களை கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.